Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2008

கிறைஸ்ட்சர்ச் நகரத்தின் புகழ்பெற்ற ஹாஸ்பிட்டல்.காதலர்தினத்தின் நள்ளிரவு தாண்டி விடிகாலை நேரம்.பணியாளர்கள் ஸ்ட்ரெச்சர்வண்டியை பரபரப்புடன் தள்ளிக் கொண்டுவந்தனர்.

ஸ்ட்ரெச்சரின் ஒருபுறம், கண்கலங்கியபடி பதட்டத்துடன்,பின்னூட்ட நாயகி,

வலையுலக டீச்சர்,

துளசி கோபால்!

மறுபுறம்-

மிஸ்டர்.கோபால்,பதட்டமாக!

ஸ்ட்ரெச்சரில் பதவிசாய் கண்மூடி படுத்திருப்பது, ஜிகே!

“என்ன ஆச்சுங்க டீச்சர்?”-பதைபதைப்புடன் கேட்டேன்.

“செத்த இருங்க வர்றேன்” என்றபடி, ஜிகேயுடனும் கோபாலுடனும்டாக்டரின் அறைக்குள் புகுந்தார்.சிறிது நேரத்தில் சிகிச்சைஅறைக்கு ஜிகே மாற்றப்பட மூடியகதவுகளை வெறித்தபடி இருவரும் நின்றனர்.சிப்பந்திகள் வெளியே வரும் ஒவ்வொரு முறையும் இருவரும் சிப்பந்திகளிடம் ஏதோ கேட்க, அவர்களோ ‘உஷ்’ என்றபடி நகர்ந்துகொண்டே இருந்தனர்.“என்னங்க ஆச்சு?”-நான் கேட்டேன்.“..ஸ்ஸ்ஸ்…என்ன ஆச்சு? எல்லாம் இந்த அம்மா கொடுக்கிற செல்லம்”- கோபால் வெடித்தார்.

“என்ன?என்மேலே என்ன தப்பு? எல்லாம் உங்களைப்போல்தானே….”அங்கே ஒரு போர்க்களம் உருவாகும் போலிருந்தது

நல்லவேளை! டாக்டர் வெளியே வந்தார்.

” டோண்ட் வொர்ரி…நல்லவேளை! கண்ணு தப்பிச்சது கடவுள் கருணை!

ஆண்ட்டிபயாடிக்ஸ் போட்டிருக்கேன்…தினம் ஊசி போடனும்…ஒரு நாலுநாள்

ஜுரமடிக்கும்…”டாக்டர் நகர்ந்துகொண்டே சொன்னார்.

“என்ன ஆச்சு?”- மீண்டும் நான்.

“ஒன்னுமில்லீங்க! வாலெண்டைன் டே அன்னிக்கு இரவில் கொஞ்சம் ரோமியோ வேஷத்தில் வெளியே போயிட்டு அடிவாங்கி

வந்திருக்கான்” வேதனையோடு டீச்சர் சொன்னாங்க.

குபீரென்று சிரித்தேன் நான்!

Read Full Post »