ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.
கலந்துகொண்ட பதிவர்கள்:
நெல்லையிலிருந்து ஆழியூரான்
பெண்களூரிலிருந்து இள்வஞ்சி
லிவிங்ஸ்மைல் வித்யா
தல பாலபாரதி
சின்னதல லக்கிலுக்
மரக்காணம் பாலா
நந்தா
முரளி கண்ணன்
ஊற்று
தமிழ்குரல்
பைத்தியக்காரன்
எம்.பி.சுந்தர்
சிவராமன்
லெனின்/பூக்குட்டி
தமிழினியன்
மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்
சிவஞானம்ஜி
ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது
ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்
முதலில் நெய்முறுக்கும்,சிறிது நேரம் கழித்து தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும் வினியோகம் செய்யப்பட்டது
சென்னைவாசியான பிறகு வித்யா கலந்துகொள்ளும் முதல் சந்திப்பு இது. பதிவர் பட்டறையின் பொழுது காணப்பட்டதைவிட தெளிவாக நிம்மதியாக இருப்பதை அவர் முகம் காட்டியது. அவருடைய இலட்சியத்தில் அவர் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகின்றது. வாழ்க;வெல்க!
பாலபாரதி சதை போட்டிருக்கின்றார்! அவர் பணிபுரிவதாகக் கூறிக்கொள்ளும் புதிய இடத்தில் பணிச்சுமை குறைவா? அல்லது அலுவலகத்தின் அருகே அளவில்லாத சாப்பாடு(unlimited meals) போடும் உண்வகம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
ஏழு மணி என்று அறிவித்திருந்தாலும் நண்பர்கள் குழுக்களாகப் பிரிந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.நான் 7-45 அளவில் விடைபெற்றேன்.நான் ஸ்கூட்டியில் சென்றிருந்ததால் “வீட்டிற்கு ஜாக்கிரதையாக சென்றதும் போன் செய்யுங்கள்”என்று பாலபாரதி சொன்னார்.
வீட்டிற்கு வந்தவுடனேயே தொலைபேசியில் அழைத்து “என்ன எப்படி இருக்கிறீர்கள்” என்றேன்……..
அனேகமாகக் காலையில் பதி கூறுவார்…..