1947 ஆகஸ்ட் 15!
இரண்டாப்பு படிக்கையிலே
இடுப்பு ட்ராயர் விழுந்திடாமெ
இடக்கையால் பிடித்தபடி
வலக்கையில் கொடியேந்தி
வாழ்க வாழ்க கோஷமிட்டு
ஊரெல்லாம் சுற்றிவந்து
ஒருவரிசையா நின்றிருக்க
பெப்பர்மிண்ட் கொடுக்கையிலே
பாவிமக்கள் கலைஞ்சுபோக
பளாரென்று விழுந்ததுவே
சுதந்திரதினப் பரிசு!
கவிதை அருமை. எனக்கு(ம்) புரிஞ்சது:-))))
ஆமாம் அதுக்கப்புறம் வருஷாவருஷம் தவறாம பரிசு கிடைச்சுக்கிட்டு
இருக்குதானே? வாத்தியார் கொடுக்காட்டி என்ன? அதான் நம்ம அ.வியாதிகள்
கொடுத்துடறாங்களே!
சுதந்திர தின நல்வாழ்த்து(க்)கள்.
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஆமாம் தங்களுக்கு வயது ?
அந்த நாட்களில் எங்கள் ஊரில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஊரைச் சுற்றி மாணவர்கள் வந்து பள்ளியில் தேசியகொடியை ஏற்றி இணிப்பு ( அது சர்க்ரையாகவும் இருக்கும் மிட்டாயியாகவும் இருக்கும்) வழங்குவர் வந்தே மாதரம் காந்திக்கு ஜெ! நேருமாமா வாழ்க! காமராஜ் வாழ்க! என்ற கோசத்துடன் வருவோம் அது இணிமையான காலம் இப்பொழுது எல்லாம் அவ்வாறு செய்வதில்லை.
கவிதை நல்லா இருக்குது. உங்க சொந்த கதையா? 🙂
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
அருமையான நினைவுகள் சி.ஜி.
SUTHANTHIRA THINA VAAZTHTHUKKAL, SI.JI SIR.
சுதந்திரதின நல்வாழ்த்துகள், துளசி!
அல்வால்லே கொடுக்கிறாங்க அ.வியாதிகள்!
சுதந்திரதின நல்வாழ்த்துகள், அவந்திகா!
பெற்ற சுதந்திரத்தைப் பேணிவளர்ப்பது
உங்களைப் போன்ற இளைய தலைமுறையின் பொறுப்பு!
சுதந்திரதின நல்வாழ்த்துகள், வல்லி அவர்களே!
இந்தியா பக்கம் எப்போ வருவீங்க?
சுதந்திரதின நல்வாழ்த்துகள், என்னார் அவர்களே!
அது ஆச்சு 67…
அந்த நாளும் வந்திடாதோ னு பாடத்தோணுதில்லே?
சுதந்திர தின நல்வாழ்த்துகள், காட்டாறு அவர்களே!
ஆமாம்! சொந்த அனுபவமேதான்……..
சுதந்திர தின நல்வாழ்த்துகள் டாக்டர் அவர்களே!
பழைய நினைவுகள் இனிமையானவைதாம்!
அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார். கவிதை வரிகளும் அருமை.
சுதந்திரதின நல்வாழ்த்துகள், வினையூக்கி அவர்களே!
அந்தநாள் ஞாபகம் வந்ததே……..