ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.
கலந்துகொண்ட பதிவர்கள்:
நெல்லையிலிருந்து ஆழியூரான்
பெண்களூரிலிருந்து இள்வஞ்சி
லிவிங்ஸ்மைல் வித்யா
தல பாலபாரதி
சின்னதல லக்கிலுக்
மரக்காணம் பாலா
நந்தா
முரளி கண்ணன்
ஊற்று
தமிழ்குரல்
பைத்தியக்காரன்
எம்.பி.சுந்தர்
சிவராமன்
லெனின்/பூக்குட்டி
தமிழினியன்
மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்
சிவஞானம்ஜி
ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது
ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்
முதலில் நெய்முறுக்கும்,சிறிது நேரம் கழித்து தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலும் வினியோகம் செய்யப்பட்டது
சென்னைவாசியான பிறகு வித்யா கலந்துகொள்ளும் முதல் சந்திப்பு இது. பதிவர் பட்டறையின் பொழுது காணப்பட்டதைவிட தெளிவாக நிம்மதியாக இருப்பதை அவர் முகம் காட்டியது. அவருடைய இலட்சியத்தில் அவர் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்பது தெரிகின்றது. வாழ்க;வெல்க!
பாலபாரதி சதை போட்டிருக்கின்றார்! அவர் பணிபுரிவதாகக் கூறிக்கொள்ளும் புதிய இடத்தில் பணிச்சுமை குறைவா? அல்லது அலுவலகத்தின் அருகே அளவில்லாத சாப்பாடு(unlimited meals) போடும் உண்வகம் உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
ஏழு மணி என்று அறிவித்திருந்தாலும் நண்பர்கள் குழுக்களாகப் பிரிந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.நான் 7-45 அளவில் விடைபெற்றேன்.நான் ஸ்கூட்டியில் சென்றிருந்ததால் “வீட்டிற்கு ஜாக்கிரதையாக சென்றதும் போன் செய்யுங்கள்”என்று பாலபாரதி சொன்னார்.
வீட்டிற்கு வந்தவுடனேயே தொலைபேசியில் அழைத்து “என்ன எப்படி இருக்கிறீர்கள்” என்றேன்……..
அனேகமாகக் காலையில் பதி கூறுவார்…..
சோதனை
sema speed neenga புயல் வேகத்தில் பதிவு போட்டாலும் அனைத்தையும் கவர் செய்துவிட்டீற்கள் நன்றி
புயல் வேகத்தில் பதிவு போட்டாலும் அனைத்தையும் கவர் செய்துவிட்டீற்கள் நன்றி
சுருக்கமாகவும் இருக்கமாகவும் நல்ல பதிவு.
ஓசைப்படாம சந்திப்பு வச்சுட்டீங்க போல!
ஆமாம்.பத்திரமா விடு வந்து சேர்ந்தீங்கதானே?:-)))
புயல்வேகப் பதிவா? அசத்துறீங்க!!!
ஆகா.. நான் இல்லாம சென்னை சந்திப்பா?! ம் ம்ம்ம.. நடத்துங்க.. இங்க கூட நேத்து ஒரு பதிவர் சந்திப்பு இருந்தது.. ஆனா யார் யார் வந்தாங்கன்னு சொல்ல மாட்டேனே 😉
முரளிகண்ணன்
ஊற்று
துளசிடீச்சர்
லக்கிலுக்
பொன்ஸ்
ஆகியோரின் மேலான வருகைக்கும் அன்பிற்கும்
நன்றி!
சில்வியாவும் குண்டலகேசியும் அப்புறம் பழனியம்மாவும்
புதரகத்தில் பொன்ஸ் கூட்டிய சந்திப்பிற்கு சென்றுவிட்டதால்
இங்கு வரவில்லை என்று அறிவித்தார்
மேற்காணும் அறிவிப்பை வெளியிட்டவர் பாலபாரதி
//சில்வியாவும் குண்டலகேசியும் அப்புறம் பழனியம்மாவும்
புதரகத்தில் பொன்ஸ் கூட்டிய சந்திப்பிற்கு சென்றுவிட்டதால்
இங்கு வரவில்லை என்று அறிவித்தார்
மேற்காணும் அறிவிப்பை வெளியிட்டவர் பாலபாரதி//
அய்யோ சிஜி.. என்ன கொடுமை இது. எனக்கே தெரியாத விசயத்தை நான் எப்படி சொல்லி இருக்க முடியும்?
😦
ஒரே கொழப்பமா இருக்குதே.. நான் சொல்லவில்லைன்னு நம்புறேன். அப்ப என் பெயரில் நான் சொல்லி இருப்பாங்கன்னு தெரியலையே.. இல்ல நான் தான் சொன்னேனா…!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. தலை சுத்துது சாமீ..!
எஸ்.பா “தலை சுத்துது சாமீ…”
நீங்கதான் அப்படி அறிவிச்சீங்க
வேணும்னா அப்ப உங்க பக்கத்தில நின்ன சுண்டல் விற்கும் பைய்யனை கேட்டுப் பாருங்க….
“………….பேச்சு விடிஞ்சாக்கப் போச்சு”ன்றது நிஜந்தான் போலிருக்கு!
ஐயா.. வணக்கம். பயங்கர ஸ்பீடா பின்னிட்டீங்களே.. நான் அன்று இரவே இந்தப்பதிவைப் பார்த்துவிட்டேன் என்றாலும் பின்னூட்டம் போட நேரமில்லை. இப்போதுதான் நெல்லைக்கு வந்து சேர்ந்தேன். நன்றி வருகைக்கும், நெய் முறுக்குக்கும், பின்ன இந்தப் பதிவுக்கும்.
நன்றி ஆழியூரான் அவர்களே நன்றி!