Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு

yes…pls…welcome! னு சொன்னா தப்பா?
அதுக்குனு ஒரு கூட்டமே கருப்புக்கொடி தூக்கப்போவுது, சென்னையில்!
மார்ச் 30,மாலை மெரினா காந்திசிலை அருகெ மொக்கைசந்திப்பு என்பது அறிந்ததே!
அதற்கான அறிவிப்பில் பதிவரின் சந்தேகத்திற்குப் பதில் சொன்ன மொக்கைத்தலை,”yes…pls… welcome”னு இங்கிலீஷில் பதில் சொன்னதாம்
இதனால் ஆத்திரப்பட்ட தமிழ்நாடு ஆங்கில இலக்கிய மாணவர் அணியின் நிர்வாகக்குசுழு கீழ்க்காணும் திரமானத்தை நிறைவேற்றி உள்ளது
மொக்கைத்தலை தொடர்ந்து ஆங்கிலத்தை அவமதிப்பதைக் கண்டிக்கும் வகையில், மொக்கைசந்திப்பின்பொழுது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
குசும்பன், அபி அப்பா வருகையின் பொழுது அசம்பாவிதம் ஏற்படுவதை பலர் விரும்பவில்லை
கோபமாயிருக்கும் திண்டுக்கல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

கிறைஸ்ட்சர்ச் நகரத்தின் புகழ்பெற்ற ஹாஸ்பிட்டல்.காதலர்தினத்தின் நள்ளிரவு தாண்டி விடிகாலை நேரம்.பணியாளர்கள் ஸ்ட்ரெச்சர்வண்டியை பரபரப்புடன் தள்ளிக் கொண்டுவந்தனர்.
ஸ்ட்ரெச்சரின் ஒருபுறம், கண்கலங்கியபடி பதட்டத்துடன்,பின்னூட்ட நாயகி,
வலையுலக டீச்சர்,
துளசி கோபால்!
மறுபுறம்-
மிஸ்டர்.கோபால்,பதட்டமாக!
ஸ்ட்ரெச்சரில் பதவிசாய் கண்மூடி படுத்திருப்பது, ஜிகே!
“என்ன ஆச்சுங்க டீச்சர்?”-பதைபதைப்புடன் கேட்டேன்.
“செத்த இருங்க வர்றேன்” என்றபடி, ஜிகேயுடனும் கோபாலுடனும்டாக்டரின் அறைக்குள் புகுந்தார்.சிறிது நேரத்தில் சிகிச்சைஅறைக்கு ஜிகே மாற்றப்பட மூடியகதவுகளை வெறித்தபடி இருவரும் நின்றனர்.சிப்பந்திகள் வெளியே வரும் ஒவ்வொரு முறையும் இருவரும் சிப்பந்திகளிடம் ஏதோ கேட்க, அவர்களோ ‘உஷ்’ என்றபடி நகர்ந்துகொண்டே இருந்தனர்.“என்னங்க ஆச்சு?”-நான் கேட்டேன்.“..ஸ்ஸ்ஸ்…என்ன [...]

முழு பதிவையும் வாசிக்க »

                பதிவர் திரு. சென்னை வந்துள்ளார்! ஞாயிறு மாலை 6=30 அளவில் புத்தகப்பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறப்பட்டது…
                விடுமுறை நாள், புத்தகப்பூங்கா. பொங்கல்கொள்முதல் கூட்டங்களால், பேருந்தில் இடம் பிடிப்பது இயலாததாகிவிட்டது;இருசக்கர வாகனத்தில் அவ்வளவு தூரம் பயணிப்பதும் இயலாது. எனவே பயணத்தைக் கைவிட்டேன்..அலைபேசியில் பாலாவைத் தொடர்புகொள்ள முயன்றால், அது தொடர்ந்து உபயோகத்தில் இருந்தது. லக்கியாரின் தொலைபேசி கூறிய பதிவுசெய்யபட்ட பதிலை புரிந்துகொள்ளவே முடியவில்லை….
                நாகேஸ்வரர் பூங்காவில் நடைபெறும் சங்கமத்திற்கு செல்ல முடிவு செய்தேன். நாட்டிய நிகழ்ச்சி. நான் பார்த்த [...]

முழு பதிவையும் வாசிக்க »

                திடீர் வலைப்பதிவர்கள் சந்திக்கலாம் இன்றுமாலை 6-30 மணியளவில், காந்திசிலை அருகே என்று லக்கிலுக் அறிவித்தார்!
                 ஒரு வருஷமா பதிவு போட்டாலும் 50 பதிவுகள்தாமே போட்டிருப்போம்….நாம திடீர் வலைப்பதிவாளர் லிஸ்ட்லே வருவோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது!
                 சரி! லக்கியாரையே கேட்டிடுவோம் என்று அவருக்கு டயல் செய்தேன்.
                “கண்ணாமூச்சி ரே..ரே.. காட்டுமூச்சி ரே..ரே  ”என்று ரிங்டோன் கேட்டதுதான் மிச்சம்.                                                              
                பாலாவுக்குப் போட்டேன். அவர் செல்போனில் “வேணும்…கல்யாணம்….சந்தோஷமாகவே…”என்ற பாட்டு!
                போதும்டா சாமீ னு பொடிநடையாக் கிளம்பினேன், மெரினா நோக்கி…..
                காந்திசிலையை ஒருமுறை பிரதட்சனம் வந்தேன்….பிறகு ஒருமுறை அப்பிரதட்சனமாக வந்தேன். [...]

முழு பதிவையும் வாசிக்க »

               ஞாயிறு விடுமுறை நாள். நல்லவேளை, முதல்வாரம் என்பதால் கூட்டம் குறைவு. பதிவர் சந்திப்பு நடைபெறுவதற்கு வசதியாகத் தக்க ஏற்பாடுகளைக் காவல்துறை செய்திருந்தது.
                 கலந்துகொண்ட பதிவர்கள்:                             
                 நெல்லையிலிருந்து  ஆழியூரான்  
                 பெண்களூரிலிருந்து இள்வஞ்சி
                 லிவிங்ஸ்மைல் வித்யா
                 தல பாலபாரதி
                 சின்னதல லக்கிலுக்
                 மரக்காணம் பாலா
                 நந்தா
                 முரளி கண்ணன்
                 ஊற்று
                 தமிழ்குரல்
                 பைத்தியக்காரன்
                 எம்.பி.சுந்தர்
                  சிவராமன்
                 லெனின்/பூக்குட்டி
                 தமிழினியன்
                 மிதக்கும்வெளி சுகுனாதிவாகர்
                 சிவஞானம்ஜி
                 ஞாநியின் ஓலம் பற்றி பெரிதும் விவாதிக்கப்பட்டது
                 ஊற்று புதுச்சேரி பட்டறை பற்றி சில விபரங்களை அளித்தார்
                முதலில் நெய்முறுக்கும்,சிறிது [...]

முழு பதிவையும் வாசிக்க »

         
               1947  ஆகஸ்ட் 15!
                இரண்டாப்பு படிக்கையிலே
                இடுப்பு ட்ராயர் விழுந்திடாமெ
                இடக்கையால் பிடித்தபடி
                வலக்கையில் கொடியேந்தி
                வாழ்க வாழ்க கோஷமிட்டு
                ஊரெல்லாம் சுற்றிவந்து
                ஒருவரிசையா நின்றிருக்க
                பெப்பர்மிண்ட் கொடுக்கையிலே
                பாவிமக்கள் கலைஞ்சுபோக
                பளாரென்று விழுந்ததுவே
                சுதந்திரதினப் பரிசு!

முழு பதிவையும் வாசிக்க »

வலைப்பதிவர் பட்டறை இன்று காலை 9.30 மணிக்கு இனிதே துவங்கியது. சுமார் 300 பதிவர்களும், வருங்கால பதிவர்களும், ஆர்வமிக்க மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். வலைப்பட்டறை வெற்றிகரமாக தொடர்கின்றது.
தமிழ்வலைப்பூ உலகில் இது ஒரு திருப்பு மையம் ஆகும்.

முழு பதிவையும் வாசிக்க »

                    பதிவர் பட்டறை நடைபெறவிருக்கும் தமிழ்த்துறை அரங்கிற்கு எப்படி வருவது?
                    மாநிலக் கல்லூரிக்கும் விவேகானந்தர் இல்லத்திற்கும் நடுவில் மெரினா வளாகம் உள்ளது.
                     பறக்கும் ரயிலில் வருவோர் திருவல்லிக்கேணி புகைவண்டி நிலையத்தில் இறங்கவும்.
                      பேருந்தில் வருவோர் கண்ணகி சிலை நிறுத்தத்தில் இறங்கி விவேகானந்தர் இல்லம் இருக்கும் திசையில் நடக்கவும்.
                       வாடகை வாகனங்களில் வருவோர் பல்கலைகழக விருந்தினர் விடுதி என்று தெளிவாக இடத்தைக் குறிப்பிடவும். (இல்லாவிடில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதிக்கு இட்டுச்செல்லக் கூடும்)
                        மெரினா திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறம்தான் [...]

முழு பதிவையும் வாசிக்க »

தல பாலபாரதியின் டி.வி நிகழ்ச்சிய யாருக்கும் சொல்லலே;அதாலே
பார்க்க/கேட்க முடியலே னு மாஞ்சு மாஞ்சு எழுதறாங்க;கண்ணீர் ஆறா
ஓடுது……..தலயும் தேம்பிகிட்டுதான் இருக்கார்! ஏன்னா அவர் நிகழ்ச்சி
விபரத்தெ ரெண்டு பேர்ட்ட மட்டும்தான் சொன்னார்!(ரகசியமாம்!….ஏன்னா பா.க.ச
ஆளுங்க அங்கும் வந்திடுவாங்களாம்)
ஆனால், அவங்க ரெண்டு பேருமே நிகழ்ச்சிய பார்க்கல்லே;
பகிஷ்கரிச்சுட்டாங்க!
[...]

முழு பதிவையும் வாசிக்க »

           என் எட்டில் மீதமுள்ள நான்கு இங்கே:
          5). எம்.ஏ
 முதல் ஆண்டில் படிக்கும் பொழுது, விடுதி அறையில் மூவர் இருந்தோம். மூவருக்கும் அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. ஒரு நண்பருக்குப் போதிய வருகைப்பதிவு இல்லையென்பதால் முதல் ஆண்டிலேயே நிறுத்தப் பட்டார்.(ரூமிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் விட்டுடுவாங்களா?) புத்திசாலித்தனமாக அடுத்த ஆண்டில் அவர் பி.எட்(B.Ed) வகுப்பிற்கு மாறி படிப்பைத்தொடர்ந்தார்;பின்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார். எம்.ஏ இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நான் துணைப்பேராசிரியராகப் பணியேற்றேன். சுமாரான மதிப்பெண்கள் பெற்ற [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »